×

போடி அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து உறவினர்கள் சாலைமறியல்: 2 பேர் கைது

 

போடி, அக்.10:போடி அருகே மேலசொக்கநாதபுரம் வினோபாஜி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் முத்து(23). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஐயப்பன் மகன் ஸ்டாலின். இவர்களிடையே விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை பட்டாளம்மன் கோயில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முத்துவை, ஸ்டாலின் தனது உறவினர்களுடன் சேர்ந்து தாக்கினார்.

இதில் முத்துவிற்கு கத்திக்குத்து விழுந்தது.படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில் முத்துவின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரமாக நீடித்த மறியலால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போடி டி.எஸ்.பி பெரியசாமி அவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தார். டி.எஸ்.பி பெரியசாமி உத்தரவின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினின் நண்பர்கள் மணி என்ற பாட்டில் மணி, ஜனா இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post போடி அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து உறவினர்கள் சாலைமறியல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Munvirotham ,Bodi ,Paramasivam ,Muthu ,Melasokkanathapuram Vinobaji Street ,Dinakaran ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு